Saturday, April 25, 2009

முள்ளின் மனம்

வேடிக்கையான
விளையாட்டுப் பொருளானது
என் கைக்கடிகாரம்
குழந்தைக்கு.

காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு.

வருத்தப்படாதவாறுதான் - அதைத்
திருப்பி வாங்கிக்
கட்டிக்கொண்டு வந்தேன்.

வருத்தமில்லையென்று
யார் சொன்னது என்றது
ஓடாமல் நின்ற கடிகார முள்.

பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.

(C) karthikaneya@gmail.com

15 comments:

'))')) said...

இந்த கவிதை ரொம்ப அருமையா இருக்கிறது :-)

'))')) said...

அழகிய பொய்கள், கவிதைக்கு அழகு சேர்க்கிறது. நன்றாக இருக்கிறது கவிதை. விரைவில், எதாவது பிரபலமான இதழில் வெளியாகும் என்று நம்புகிறேன்.

'))')) said...

அட!

//பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.
//

கடைசி வரிகள் அருமையாக இருக்கிறது தோழி

'))')) said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க கவிதை.

'))')) said...

intha kavithai rompa pitiththirukkirathu karthika.

'))')) said...

beauty......

'))')) said...

oho, mullukkum manam undo. simply nice

'))')) said...

nalla parhiya oda thodangiyathu mull mattum thana,unnoda manasum odiyirukumae.
I Love You Dear.
By
Vijikka

Anonymous said...

"முள்ளும் மனமும்" (முள்ளும் மலரும் என்ற பாணியில்)இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ!

Anonymous said...

காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு

jolly-a irukku :))

'))')) said...

அருமை

'))')) said...

ஆஹா. எனக்கே ஆச்சரியம். நான் சொன்னதுபோலவே கல்கியில் இக் கவிதை. வாழ்த்துகள். :)

( நாங்கத்தான் சொல்றோமில்ல ஆங்)

'))')) said...

Thanks to Vijjinna, Muthuvel, Prem, Yathra, Mankuthirai, Rajan, Syed anna, Vijikka, Surya, Veenaapponavan, Thigazhmilir

'))')) said...

@ Muthuvel: Amam, neenga sonna mathiri nadanthathu. Thanks. Adikkadi vandhu ippadi sollunga. :)

'))')) said...

மிக மிக அருமை