Tuesday, February 24, 2009

ஈரம் உலரா கதைகள்

ஒவ்வொருமுறையும்
உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச்
சலிக்காமல் சொல்கிறது
சுவாரஸ்யமாகவும் - இந்த
வேலையற்ற மழை.


(C) karthikaneya@gmail.com

Wednesday, February 18, 2009

முதல்முறை

இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

(C) karthikaneya@gmail.com

உருகும் சொல்

உறைபனிக் கத்தி போல்
செருகிக் கொண்டாய்
உன் உரையாடல்களோடு
சிலவேளை நான் பரிமாறும்
மௌனங்களை.
உன்னுள் அவை
உருகத் தொடங்கியபின் பார்
ஒருபோதும் நிற்காது
என் சொற்கள்.

(C) karthikaneya@gmail.com

சிறகு

கிளையினின்று
விடுபட்ட நொடியில்
பறக்கத்தொடங்கியது
ஒரே ஒரு சருகு.

(C) karthikaneya@gmail.com

உடுக்கை நட்பு

தோழன் தோளில்போல்
வாஞ்சையோடு
கைபோட்டிருந்தது
பக்கத்து கொடியில்
என் சட்டை.

(C) karthikaneya@gmail.com