Saturday, January 30, 2010

அதுவும்...

நீயும் சிந்து
ஒரு கண்ணீர்த் துளியோ
சிறு புன்னகையோ...
அகவெளிப்பாட்டின்
மெய் சாட்சியாக
என் அழுகையினூடே
அப்போது
அங்கே
அது இருக்கட்டும்
அதுவும் இருக்கட்டும்...

(C) karthikaneya@gmail.com

Tuesday, January 05, 2010

நத்தையின் சலனம்

நத்தையின் சலனம் போல்
நகர்ந்திருக்கக்கூடும்
தொட்டாசுருங்கி இலைகள்
விரிவது போல்
விடிந்திருக்கக்கூடும்
அவ்விரவு.
நொடி முள்ளின் ஒரு நகர்வில்
கடந்ததாகத் தோன்றிய
நான் தூங்கியதாக
நினைவடுக்கில் பதிந்திராத
அந்த இரவில்
மீண்டுமொரு முறை தூங்கி
தேடவேண்டும் - அந்த
தொலைந்த இரவின் கனவுகளை.

(C) karthikaneya@gmail.com