எந்த வட்டத்துக்குள்ளோ
சதுரத்துக்குள்ளோ
இல்லாவிடினும்
இந்த வானுக்குக் கீழே
எங்கோ சிலர்
இருக்கத்தான் செய்கிறார்கள்
நாம் சொல்லி அழைக்கப்
பிரியப்படும் பெயருடன்.
(C) karthikaneya@gmail.com
Wednesday, January 28, 2009
Saturday, January 24, 2009
விடுதிக் குறிப்பு - அடம்பிடிக்கும் தூக்கம்
பக்கத்தில் படுக்க வைத்து
தட்டிக் கொடுத்தாலும்
கட்டிப்போட்டாலும்
கதை சொல்லிப் பார்த்தாலும்
காலில் விழுந்து கேட்டாலும்
கண் மறைத்து ஓடிவிடும்.
எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஏங்குகிற குழந்தைபோல்
எல்லா அறைகளையும்
எட்டிப் பார்த்து ஏமாந்து
என்னிடமே திரும்புகையில்
இரவு விடிந்திருக்கும்.
(C) karthikaneya@gmail.com
தட்டிக் கொடுத்தாலும்
கட்டிப்போட்டாலும்
கதை சொல்லிப் பார்த்தாலும்
காலில் விழுந்து கேட்டாலும்
கண் மறைத்து ஓடிவிடும்.
எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஏங்குகிற குழந்தைபோல்
எல்லா அறைகளையும்
எட்டிப் பார்த்து ஏமாந்து
என்னிடமே திரும்புகையில்
இரவு விடிந்திருக்கும்.
(C) karthikaneya@gmail.com
Saturday, January 10, 2009
எல்லா மழையும் மழையல்ல
இலைகளில் பனித்துளிபோல்
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!
(C) karthikaneya@gmail.com
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!
(C) karthikaneya@gmail.com
என் இரவின் இசை
என் கைக்கடிகார
நொடிமுள்ளின் லயம் விட்டு
யார் யார் வீட்டுக்
கடிகார ஓசையெல்லாமோ
உன்னித்து ரசித்துக் கொண்டிருக்கின்றது
உறக்கம் மறுத்த
என் இரவு.
(C) karthikaneya@gmail.com
நொடிமுள்ளின் லயம் விட்டு
யார் யார் வீட்டுக்
கடிகார ஓசையெல்லாமோ
உன்னித்து ரசித்துக் கொண்டிருக்கின்றது
உறக்கம் மறுத்த
என் இரவு.
(C) karthikaneya@gmail.com
Subscribe to:
Posts (Atom)