Monday, April 06, 2009

குற்றவாளியின் சாயல்

உன் சிநேகம் கிடைத்தது
நான் எதிர்பாரா வேகத்தில்.
ஏற்றுக்கொள்ளத் தயங்குமளவு
இருந்தது உன் நேசம்.
எல்லாவற்றுக்கும் காரணம்
என் பெயரில் இருந்த
உன் காதலனின் சாயல்.
பின்னொரு நாள்
என் தோள்களில் சிந்திய
கண்ணீர்த் துளிகளால்
உன் காதலின் பிரிவைக் கூறினாய்.
அன்றிலிருந்து
உன் நேர்ப்பார்வை அஞ்சி
விலகிச் செல்கிறேன்.
தடயங்கள் ஏதுமற்ற காதலுக்கு
மௌன சாட்சியாக மாறியபின்
இப்போதெல்லாம் - யாரிடம்
என் பெயர் கூறும்போதும்
தொனிக்கிறது - ஒரு
குற்றவாளியின் சாயல்.

(C) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

கவிதை மிகப் பிடித்திருக்கிறது

Anonymous said...

ம்ம்...

சில பெயர்கள் மீது விருப்பு, வெறுப்பு வருவதற்கு இப்படியும்...

ஒரு கவிதை பிறந்திருக்கே!

'))')) said...

மிகவும் ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்