சில வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன.
சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கின்றன.
ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று
தாழப் பறக்கிறது.
அரைவெள்ளை வண்ணத்துப்பூச்சி
மேலெழும்பி வருகிறது.
இளமஞ்சள் சிறகுகள்
காற்றில் நிறைகின்றன.
உலகமே வண்ணத்துப்பூச்சி மயமாகிவிட்டது
சில வண்ணத்துப்பூச்சிகள்
ஓடித் திரிகிற பூங்காவில்.
(C) karthikaneya@gmail.com
Friday, February 05, 2010
Thursday, February 04, 2010
நீயும் நீயும்...
நீ என்பதும் நீதான் என்று
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.
இப்போது இது என் புத்துலகம்.
பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.
(C) karthikaneya@gmail.com
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.
இப்போது இது என் புத்துலகம்.
பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.
(C) karthikaneya@gmail.com
Subscribe to:
Posts (Atom)