Monday, April 06, 2009

இரவைத் தின்ற வார்த்தைகள்

இரவு ரயில் பயணமொன்றில்
பேச்சினிலே பேரார்வமென்று
அந்நிய மொழியில் அறிமுகமானான்
எதிர் இருக்கை சிநேகிதன்.
'டாவின்சி கோட்
இந்திய இலக்கியங்கள்
இரவு உணவு
சென்னை ஆட்டோக்கள்
தமிழகத் தந்தை
ஜெர்மன் தாய்
இங்கிலாந்து கல்வி'
இன்னும் ஏதேதோ
ஆல்கஹால் மணம் - என்
விழிகளில் பரவப் பேசிவிட்டு
உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.
உறக்கத்தின் ஊடே - ஏதோ
உணர்வு தீண்ட
திடுக்கிட்டு விழித்தேன்.
ஒருக்களித்துப் படுத்து
உற்றுப் பார்த்திருந்தவன்
விழிகளில் சந்தித்து
'டோன்ட் வொர்ரி' - என
வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.
(C) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

ரயில் பயணத்தில் நடக்கும் பெரும் சிக்கல் இது :(

'))')) said...

Pala murai Rail payanathil mattumanri perunthu payanathilum naanum kooda ithu pondra mosamana anubavangalai santhithathundu. Ithu karbanai mattumae yenum patchathil magizhvane (oru sahothariyai)

Anonymous said...

//என் விழிகளில் பரவப் பேசிவிட்டு உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.//

அப்போதிருந்தே கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.

//வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.//

பொம்மை படம் போட்ட போர்வையா உங்க போர்வை? அல்லது எப்போதும் பொம்மைகள் வைத்திருப்பீர்களா?

வித்தியாசமான கவிதை முயற்சி செய்திருக்கிறீர்கள்.

அழுத்தி, குற்றம் சாட்டும் தொனியில் இல்லாமல், மென்மையாக நிகழ்வை புரியவும் வைத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!!!

'))')) said...

vaazhthugal.....

Anonymous said...

இரவில் என்னோடு விழித்திருந்தன - என்போர்வையின் பொம்மைகளும்.

bommai padimam arumaiyaa iruku.