"முதன்முதலாய் உன்னை
இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன்
ஒரு மூன்றாம் பிறையிடம்.
"நானும் தான்" என்றது.
நான் பார்த்த பிறையைப்
பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை.
அதையும் அப்போதுதான்
பார்க்கிறேன் என்றேன்.
"ஆமாம் நானும்" என்றது பிறையும்.
(C) karthikaneya@gmail.com
Tuesday, March 31, 2009
Saturday, March 21, 2009
பள்ளிக் கூண்டு
பால்மணம் வீசும் மேனியில்
பறவைக் கூண்டு வாசம் மெலிதாக
பள்ளி சென்று வந்த முதல் நாளில்.
(C) karthikaneya@gmail.com
Monday, March 09, 2009
கொடி ரோஜாக்கள்
ஓரிரு நாட்கள் பூக்கின்றன
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.
(C) karthikaneya@gmail.com
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.
(C) karthikaneya@gmail.com
உன்னதம் கொன்று...
பகிர்ந்து கொள்ள
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.
(C) karthikaneya@gmail.com
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.
(C) karthikaneya@gmail.com
மழை பெய்யாத மழை நாள்
கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
(C) karthikaneya@gmail.com
இழையும் நட்பு
ஏதோ ஒரு தருணத்தை
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.
(C) karthikaneya@gmail.com
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.
(C) karthikaneya@gmail.com
என் கோப நிலா
தற்செயலாய்
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.
(C) karthikaneya@gmail.com
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.
(C) karthikaneya@gmail.com
Wednesday, March 04, 2009
Subscribe to:
Posts (Atom)