Monday, April 06, 2009

ஏதோ ஒரு பொழுது...

மழைத்துளி போல் சீராக
மரங்களின் இலைகள் சிந்த
கதவிடுக்கில் வழிவதுபோல்
காற்று மெல்ல கசிந்து வீச
அதுவரை யாரும்
அறிந்திராத சாயலில்
மஞ்சள் வெளிச்சம்
எங்கும் பரவ
மாலையோ காலையோ என
மனம் மயங்கிய பொழுதொன்றில்
மேலெழும்பி வந்து கொண்டிருந்தது
மேற்கினின்று சூரியன்.
(C) karthikaneya@gmail.com

2 comments:

Anonymous said...

இயற்கை கவிதாயினியே!

இயற்கை விதிமுறைகளை மாற்றி எழுதிட்டீங்களே.))

குழப்பம். என்ன பொழுது அது?

'))')) said...

மயக்கத்தினாலே திசை தெரியல போலும்!