Tuesday, May 19, 2009

ஆரஞ்சுப் புன்னகை

ஆரஞ்சு நிலவாக ஒளிர்ந்த
அந்திச் சூரியன்
அலுவல் நேரம் தாண்டியும்
அகலாமல் நின்றது மேற்கில் -
ரசிக்கப்படாத ஏக்கத்தில்.

அனிச்சையாய் நகரும் கூட்டத்தில்
பரபரப்பான கடைவீதியின்
சாலையைக் கடக்கையில்
தற்செயலாய்
திரும்பிப் பார்த்து
திகைத்து நின்றபோது
ஸ்தம்பித்தது போக்குவரத்து.

புன்னகைத்தவாறே
கீழிறங்கத் தொடங்கியது
சூரியன்.
(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

உங்கள் பார்வை பட்டு

சூரியனே! ...

'))')) said...

உயிரோசையில் வாசித்தேன். நல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்.

'))')) said...

\\கூட்டத்தில்பரபரப்பான கடைவீதியின் சாலையைக் கடக்கையில்தற்செயலாய்திரும்பிப் பார்த்துதிகைத்து நின்றபோதுஸ்தம்பித்தது போக்குவரத்து.
புன்னகைத்தவாறே\\

இயற்கைக் கவிஞர் நீங்கள் :-)

புது டெம்பிளேடெல்லாம் அசத்தலா இருக்கு :-)

'))')) said...

பொறுத்தமாக புகைப்படம் இருந்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது :-)

'))')) said...

//ரசிக்கப்படாத ஏக்கத்தில்.//
----------------------------
அருமை.. இந்த வரி என்னமோ செய்கிறது. சொல்லத் தெரியவில்லை...

'))')) said...

அருமை. மிகவும் ரசித்தேன்

சூரியனுடன் இந்த கவிதையும் புன்னகைப்பதாய் படுகிறது .. வாழ்த்துக்கள்

'))')) said...

நல்லா இருக்கு