Tuesday, May 19, 2009

நண்பர்கள் பரிசளித்த தோழிகள்

'கோபிக்கிறாள் என் மனைவி
குறுஞ்செய்தி அனுப்பாதே'
என்றொரு நண்பன்
கூறிய பின்னர்,

தன் கணவன் எனை அழைக்கும்
செல்லப் பெயர் சொல்லி
அழைத்துப் பேசினாள்
இன்னொரு நண்பனின் மனைவி.

கொடுத்து வைத்த - என்
தோழர்களுக்கு வாய்த்திருக்கிறது
அத்தனை சீக்கிரம் சலித்துப் போகாத
குடும்ப வாழ்க்கையோடு
கணவன் என்னும் கதாபாத்திரம்.
(C) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

அத்தனை சீக்கிரம் சலித்துப் போகாத குடும்ப வாழ்க்கையோடு கணவன் என்னும் கதாபாத்திரம்\\

என்னங்க ஆச்சி!

'))')) said...

.....Kanavan azhaikum chella peyar solli yenai azhaithu..... romba pidichirunthuchu dear.
I love you da.
Vijikka.

'))')) said...

//கொடுத்து வைத்த - என்
தோழர்களுக்கு வாய்த்திருக்கிறது
அத்தனை சீக்கிரம் சலித்துப் போகாத
குடும்ப வாழ்க்கையோடு
கணவன் என்னும் கதாபாத்திரம். //
-----------------------------

நல்லாருக்குங்க....

'))')) said...

indha kavithaiyai uyirosaiyil vaasikka nerndhapothey kavarapatten ..

idhey nilaithaan penthoaligalin
kanavarkaloadum..

miga thelivaana thoniyum padimangalum
alagu serkindrana

nesamithran.blogspot.com

'))')) said...

புதிய தளம் - தொடர்ந்து பயணிப்பீர்கள் என நம்புகிறேன்