Monday, March 09, 2009

உன்னதம் கொன்று...


பகிர்ந்து கொள்ள
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.

(C) karthikaneya@gmail.com

4 comments:

'))')) said...

வாழ்த்துகள்

Anonymous said...

கார்த்திகா,

விரும்பியதை பதிவு செய்ய ஏன் பரிச்சயமற்ற் சொற்களைத் தேடவேண்டும் என்பதே என் கேள்வி.

மெல்ல உயிர்விட்டுக்கொண்டிருப்பது மென்கவிதை உணர்வா?

...நன்று...

Anonymous said...

கார்த்திகா,

இன்னொன்று கேட்கணும்...தலைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.

ஆனா உங்க கவிதைக்கு எப்படி பொருத்தமா அமைந்திருக்கிறது...?

அன்புடன்

'))')) said...

அட போங்க

எல்லா கவிதையும் நல்லாத்தான் இருக்கு. comment போட்டு கை வலிக்குது.