Monday, March 09, 2009

இழையும் நட்பு

ஏதோ ஒரு தருணத்தை
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.

(C) karthikaneya@gmail.com

1 comments:

Anonymous said...

நானும் இந்த உணர்வை அனுபவச்சிருக்கேன்.

படம் எவ்வளவு பொருத்தமா இருக்கு!

அருமை.