Wednesday, September 03, 2008

விடுதிக் குறிப்பு - 2

என் அறையின்
குறுக்கே விழும்
சாளரத்தின் வழி
சாயும் நிலவொளி
இரவின் நீளத்தை
அளந்து சொல்லும்.

காலைப் பனியில்
கதவருகே பூத்திருக்கும்
தங்க அரளி மலர்கள்
தனிமை ஏக்கம் தரும்.

எதிரே தெரியும்
கட்டடப் பின்புறங்களில்
இளைப்பாறும் புறாக்கள்
எதிர்பாராத போது
தலை திருப்பிப் பார்ப்பது
தோழமை உணர்வு தரும்.

இழப்புகள் பழக்கித்தரும்
எதிர்பாரா நட்பு தரும்
வேதனை மகிழ்ச்சி
விடுதி வாழ்க்கை.

4 comments:

'))')) said...

வாழ்க்கைப் பாதையிலே இழப்பும் அதை மீட்டுத் தரும் நட்பும்தானே இனிமை.....பழகி விடும் கிருத்திகா..
அன்புடன் அருணா

'))')) said...

nice writing keep it up - vivek

'))')) said...

ரொம்ப Home sickness பீலிங்க்ஸ்..!!??

இதுவும் வாழ்க்கையின் அனுபவிக்க வேண்டிய ஒரு பொழுது, இடம் என்று கொள்ளுங்கள்...

'))')) said...

/இழப்புகள் பழக்கித்தரும்
எதிர்பாரா நட்பு தரும்
வேதனை மகிழ்ச்சி
விடுதி வாழ்க்கை./

அருமை