Wednesday, September 03, 2008

மழை துவங்கிய அரட்டை

மனம் விட்டுப் பேசியவாறு
மழையில் நனைந்து வந்தோம்.
சாலையோரக் கடைக்காரர்
சற்று நின்று போகச் சொன்னார்.
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
மறுபடி தொடர்ந்தது அரட்டை.
ரயில் கிளம்ப சில நிமிடம் இருக்க
இடைவெளி விட்டது மழை.
ஓடிச் சென்று ஏறிக்கொண்டு
விருப்பமில்லாதது போல்
விரும்பி அமர்ந்து கொண்டோம்
மழை நனைத்த இருக்கைகளில்.
ஒடுங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும்
ஓய்ந்து போன மழையை எண்ணி
ஒன்றும் பேசாமலே இருந்தோம்.
ரயில் நகரத் தொடங்கியபோது
மீண்டும் அரட்டையைத் துவங்கி வைத்தது
அப்போது பெய்யத் துவங்கிய மழை.

5 comments:

'))')) said...

நன்று..

'))')) said...

அழகு.. மிக அழகான தருணமது..

:)))

'))')) said...

வாழ்த்துக்கள்.. அழகான கவிதையும் கூட..

Anonymous said...

Hi karthi,

I am really wondered about your thoughts. While reading this, i remember the past events of us.

Congrats to the growth of Neyamukil.

Tatu, Byu, see u, kaappu, flyu
Many kisses.

Vidhya

'))')) said...

அருமை