நத்தையின் சலனம் போல்
நகர்ந்திருக்கக்கூடும்
தொட்டாசுருங்கி இலைகள்
விரிவது போல்
விடிந்திருக்கக்கூடும்
அவ்விரவு.
நொடி முள்ளின் ஒரு நகர்வில்
கடந்ததாகத் தோன்றிய
நான் தூங்கியதாக
நினைவடுக்கில் பதிந்திராத
அந்த இரவில்
மீண்டுமொரு முறை தூங்கி
தேடவேண்டும் - அந்த
தொலைந்த இரவின் கனவுகளை.
7 comments:
மிக அருமை.. சலனமின்றி மனதில் படிகிறது..
அருமை
வாழ்த்துகள்
Azhagu... :)
அவ்விரவு.நொடி முள்ளின் ஒரு நகர்வில்கடந்ததாகத் தோன்றிய நான் தூங்கியதாகநினைவடுக்கில் பதிந்திராத அந்த இரவில்மீண்டுமொரு முறை தூங்கிதேடவேண்டும் - அந்த தொலைந்த இரவின் கனவுகளை.
இவ்வளவு பெரிய நீண்ட வாக்கியமா?
கவிதை மிக அருமை கார்த்திகா.
Post a Comment