Saturday, January 10, 2009

எல்லா மழையும் மழையல்ல

இலைகளில் பனித்துளிபோல்
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!

(C) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

//அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்//

அருமை.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமே

'))')) said...

நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/

'))')) said...

மிக அழகான வர்னனையுடன் தொடங்கி அழகு குலையாமல் பயனித்து முடிவினில் துக்கமாக ...

உங்கள் கவிதை வரிகள்.

Anonymous said...

அருமை. திருக்குறள் ஞாபகம் வருகிறது.

எல்லா மழையும் மழையல்ல - சான்றோர்க்கு
நெல்லை மழையே மழை.

தொல்காப்பியம் கூட ஞாபகம் வருகிறது. பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று விடுகிறேன்.

- வீணாப்போனவன்
பி.கு. - பனித்துளி அருமையான படிமம்.

'))')) said...

மழை...மழை...மழை...எல்லா மழையும் மழையல்ல...ரொம்ப சரி தான் .