Monday, September 20, 2010

மர மகள்

அதிகமாக வளரவேண்டுமென
ஆசை கொண்டிருந்தவள்
அடர்வனத்துள் ஓர்நாள்
வழிதவறித் தொலைந்துவிட்டாள்.
ஆகாயம் தொடும் விருட்சங்கள் கண்டு
அதிசயித்து நின்றவளை
அதன்பின் வளர்த்துவருகின்றன
அம்மரங்களே இப்போது.
அருகினிலே வருகின்றது
அம்மரங்களின் தலையினில் ஏறிநின்று
அவள் உலகினை விளிக்கும் நாள்.


(c) karthikaneya@gmail.com

1 comments:

'))')) said...

மரமகளின் குரல்
இப்பொழுதே சன்னமாக
கேட்க ஆரம்பித்து விட்டதே..