புகைப்படத்துக்கு பாவனை காட்டிய
மலையுச்சி மரங்களைச் சுற்றி
‘அசையாநின்ற’ மேகங்களையும்
பதிவு செய்த புகைப்படத்தில்
அசையாதே நின்ற மேகங்களில்
அக்கணத்தின்
அசைவில்லை அழகில்லை.
படம்பிடிக்காதிருந்திருந்தால்
என் நாட்களினிடையே
அலைந்தவாறிருந்திருக்கும்
அம்மேகக் கூட்டம் என
ஏங்கத் தொடங்கியபோது
அறை முழுதும்
தூறல் போடத் தொடங்கியிருந்தது
புகைப்படத்தினின்று
பைய வெளியேறியிருந்த மேகம்.
Monday, September 20, 2010
'அசையாநின்ற’
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் கவிதையை
படிக்கும் போதே
மனசுக்குள் மழை
தூற ஆரம்பித்து விட்டது.
வசீகரம்.
கவிதை நல்லா இருக்கு. அதில் உள்ளார்ந்த அர்த்தம் வியப்புணர்வை அதிகரித்தது. வாழ்த்துகள்
கார்த்திகாவின் கவிதைகளில் எப்போதும் மழை பெய்துகொண்டே இருக்கும்.
அருமை..
Post a Comment