Thursday, February 04, 2010

நீயும் நீயும்...

நீ என்பதும் நீதான் என்று
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.

இப்போது இது என் புத்துலகம்.

பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.

(C) karthikaneya@gmail.com

4 comments:

'))')) said...

நீங்கள் நீங்கள் தான்.
அருமை..

'))')) said...

அட அருமைங்க... நல்லா வார்த்தைகளை பின்னியிருக்கீங்க....

'))')) said...

கவிதை நன்றாக இருக்கின்றது. இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் உணர்ந்ததை. இது என் கருத்து. தவறாகவும் இருக்கலாம்

'))')) said...

//பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்//


Then we lose the innocence of Child Hood...